
போர் நிறுத்தப் பேச்சுவர்த்தை நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையிலானப் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கிய
போர் நிறுத்த திட்டத்தைப் பரிந்துரைச் செய்தார்.
இதில், பெரும்பாலான கோரிக்கைகள் ரஷ்யாவுக்கு சாதகமாக உள்ள நிலையில், உக்ரைன் ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இதில், ஒன்பது மாடி கட்டிடம் தீப்பிடித்து எரிந்த நிலையில், பலர் காயம் அடைந்தனர்.-


