Udhayanidhi Stalin:திட்டமிட்டபடி 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம்!

சனிக்கிழமை காலையில் கார் பந்தயத்தைப் பொதுமக்கள் இலவசமாகப் பார்க்கலாம்.சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்படும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்,

சென்னை:சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் நடக்கவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்தப் போட்டியைத் தற்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:F4 கார் பந்தயத்தை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

சனிக்கிழமை காலையில் கார் பந்தயத்தைப் பொதுமக்கள் இலவசமாகப் பார்க்கலாம்.சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்படும், இரவு 10.30 மணிவரை கார் பந்தய போட்டிகள் நடைபெறும்.போக்குவரத்துக்கு எந்தவிட இடையூறும் ஏற்படாத வகையில் கார் பந்தயம் நடத்தப்படும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *