
சென்னை: டி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகரை நியமித்துத் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022 ஜூனில் ஓய்வு பெற்றார். அதன்பின், உறுப்பினராக உள்ள முனியநாதன், பொறுப்பு தலைவராகச் செயல்பட்டு வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாகப் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில், எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ்-யை டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமித்துத் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
வருவாய் துறை கமிஷனராக உள்ள எஸ்.கே.பிரபாகர், விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். பொறுப்பேற்கும் நாளிலிருந்து 6 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரைத் தமிழக அரசுப் பரிந்துரை செய்தது. அதனைக் கவர்னர் ரவி பரிசீலிக்காமல் இருந்துவந்தார்.


