ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

Advertisements

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், தமிழக அரசுக்கும் மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவியிலிருந்து திரும்பப் பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் கடந்த மாதம் 10-ம் தேதி பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “அரசியல் சாசனத்துக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

அதற்கான உரிய உத்தரவைக் குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகம் மற்றும் ஒன்றிய அரசு ஆகியவைக்கு பரிந்துரையுடன் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது.

ஆளுநர் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்,” என்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *