
சென்னை: சென்னை கண்ணகி நகர், எழில் நகரில் 22 ஆயிரம் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் தனித்தனி குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஜூலை மாதம் நிறைவடையும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர், சுனாமி குடியிருப்பில் உள்ள பொதுமக்களிடம் மாநகராட்சி, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் போன்ற முக்கிய சேவை துறை அலுவலர்களை கொண்டு, குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.



