Rozgar Mela: இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பாஜ., அரசு செயல்படும்!

Advertisements

இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பாஜ., அரசு செயல்படும்!

புதுடில்லி: ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 51 ஆயிரம் பேருக்கு இன்று பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். பின்னர், ” இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பாஜ., அரசு செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி பேசினார்.

நாடு முழுதும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ‘ரோஜ்கர் மேளா’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த மத்திய அரசு முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று (அக்.28) வீடியோ கான்பரன்சில் வாயிலாக 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ரோஜ்கர் மேளா திட்டம் இளைஞர்கள் மீதான நமது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பாஜ., அரசு செயல்பட்டு வருகிறது. நாங்கள் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவது மட்டுமல்லாமல் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ளோம்.

ரோஜ்கர் மேளா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் பயணம் துவங்கப்பட்டது. அதன்பிறகு லட்சக்கணக்கானோருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு, இன்று 51,000க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் பொலிவிழந்த காதி நிறுவனம் தற்போது மீண்டும் பொலிவு பெறுகிறது. வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது தான் ரோஜ்கர் மேளா திட்டம். நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள், ரயில்வே, பதவிகள், உள்துறை, வருவாய், உயர்கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். நாங்கள் ஆட்சேர்ப்பு செயல்முறையை ஒழுங்குபடுத்தியது மட்டுமல்லாமல் சில தேர்வுகளை மறுசீரமைத்தோம்.

பணியாளர் தேர்வாணையத்தின் ஆட்சேர்ப்பு நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகளை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படுகிறது. பல மாநிலங்களில் அரசுத் தேர்வுகள் பிராந்திய மொழிகளில் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது.

இது மொழித் தடையால் ஏற்படும் பாதிப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தீபாவளிக்கு சில நாட்கள் இருக்கிறது. ஆனால் 50,000 நியமனக் கடிதங்களைப் பெற்றவர்களின் குடும்பங்களுக்கு இந்த சந்தர்ப்பம் தீபாவளி போல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

விவசாயிகள் ட்ரோன் பயன்படுத்தும் அளவிற்கு நாட்டில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைவதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் சுற்றுலாத்துறை வளர்ச்சி காரணமாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *