Roja Selvamani: மத்திய அரசைக் குறை சொல்லக் கூடாது!

Advertisements

மாநிலங்களில் எந்தப் பேரிடர்  இழப்புகள் நடந்தாலும் அதற்கு மாநில அரசே முழு பொறுப்பு  ஏற்க வேண்டுமே தவிர மத்திய அரசைக் குற்றம் சொல்லக் கூடாது என ஆந்திர மாநில அமைச்சரும்  நடிகருமான ரோஜா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஆந்திர மாநில அமைச்சரும் நடிகருமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.தரிசனத்திற்கு பின் அருகே இருந்த வீட்டுக்குச் சென்ற ரோஜாவைக் காண ஆந்திர மாநில பக்தர்கள் புகைப்படம் எடுக்க ஒன்று கூடி வீட்டுக்கு வெளியே சோர்ந்து கொண்டனர்.இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

தொடர் விடுமுறை காரணமாகக் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இன்று தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் பிரபல நடிகையுமான ரோஜா ஆந்திர மாநிலத்திலிருந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்ய இன்று காலை வருகை தந்திருந்தார்.

கோவிலுக்குத் தரிசனம் செய்ய ஆந்திரா அமைச்சர் வருகை தெரிந்த ஆந்திரா மாநில பக்தர்கள் நடிகை ரோஜாவைச் சூழ்ந்து புகைப்படம் எடுக்க ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டனர்.

கோவிலிலிருந்து அங்கிருந்து புறப்பட்டு அருகே இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நேரம் தங்கி இருந்த நிலையில் அப்பகுதியில் ரோஜா இருப்பதை அறிந்த ஆந்திரா மாநில பக்தர்கள் நடிகை ரோஜாவிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக  ஏராளமானோர் வீட்டைச் சூழ்ந்து வெளியே வர முடியாத அளவிற்கு முண்டியடித்துக் கொண்டனர்.

பின் பாதுகாப்பிற்காக இருந்த காவலர்கள் அங்கிருந்து ஆந்திர மாநில பக்தர்களை அப்புறப்படுத்தி நடிகை ரோஜாவைக் காரில் அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது

பின் செய்தியாளரைச் சந்தித்த அமைச்சரும் நடிகையும்மான ரோஜா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா இரு மாலையங்களிலும் மக்கள் இரு வேறு விதமாக எதிர்பார்ப்புகள் உள்ளன,

சந்திரபாபு நாயுடு கூறியது போல் தெலுங்கானாவில் பவன் கல்யாண் தோற்றது போல் ஆந்திராவில் டெபாசிட் கூட வாங்க மாட்டார், சந்திரபாபு நாயுடு அவர்களை ஆந்திர மாநில மக்கள் திருப்பி அனுப்பிவிடுவார்கள்,

மாநிலங்களில் எந்தப் பேரிடர்  இழப்புகள் நடந்தாலும் அதற்கு மாநில அரசே முழு பொறுப்பு  ஏற்க வேண்டுமே தவிர மத்திய அரசைக் குற்றம் சொல்லக் கூடாது என ஆந்திர மாநில அமைச்சரும்  நடிகருமான ரோஜா தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *