மகா கும்பமேளா புனித நீரில் நனைந்த ஆர்சிபி ஜெர்சி!

Advertisements

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற டி20 தொடராக இந்தியன் பிரீமியர் லீக் உள்ளது. இந்தத் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிகளவு ரசிகர் பட்டாளம் உண்டு.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது.

இதுவரை பல அணிகள் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ள நிலையில், பெங்களூரு அணி இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கிறது.

ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் பெங்களூரு அணி வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது, எதிரணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் வெற்றிகனியை மட்டும் ஆர்சிபியால் எட்டிப் பறிக்க முடியாமல் உள்ளது.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரிலாவது ஆர்சிபி வெற்றி பெற வேண்டும் என்று அந்த அணியின் ரசிகர்கள் உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் ஆர்சிபி ஜெர்சியுடன் புனித நீராடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி ஒவ்வொரு ஆர்சிபி ரசிகரின் ஏக்கத்தையும் தூண்டிவிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *