Rajiv Kumar: தேர்தல் பத்திர விவரங்கள் விரைவில் வெளியீடு!

Advertisements

ஸ்ரீநகர்: “தேர்தல் பத்திர தரவுகள்குறித்த காலத்திற்குள் வெளியிடப்படும். எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாகவே உள்ளோம்” என இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முன்னேற்பாடுகள்குறித்து ஜம்மு காஷ்மீரில் ஆய்வு செய்தபிறகு, ராஜிவ் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஜம்மு காஷ்மீரில் வரும் லோக்சபா தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு உறுதி செய்யப்படும். அனைவருக்கும் சமமான மற்றும் போதிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு போதிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் 6.9 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.100வயதுக்கும் மேற்பட்டோர் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.

மாநில எல்லைகள் மற்றும் சர்வதேச எல்லைகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும். ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். லோக்சபா தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2014ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் இறுதியாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை நடத்த முழுமையான அளவில் தயாராக உள்ளோம். போதைப்பொருள் உள்ளிட்டவைகளின் நடமாட்டத்தை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஜனநாயக திருவிழாவில் இளைஞர்கள் உட்பட அனைவரும் பங்கேற்க வேண்டும். தேர்தல் பத்திர தரவுகள் நிச்சயம் குறித்த காலத்திற்குள் வெளியிடப்படும். எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாகவே உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *