
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்கள் வீசி, 68 ரன்கள் விட்டுக்கொடுத்து டி20 வடிவத்தில் அதிக ரன் விட்டுகொடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையைத் தனது பெயரில் பதிவு செய்தார்.
இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் பதம் பார்த்தார். இதில், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவின் பந்துகளில்தான் அதிக ரன்கள் எடுத்தார்.
இந்தப் போட்டியில் மொத்தம் 4 ஓவர்கள் வீசிய பிரசித் கிருஷ்ணா, 68 ரன்கள் விட்டுக்கொடுத்து டி20 வடிவத்தில் அதிக ரன் விட்டுகொடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையைத் தனது பெயரில் பதிவு செய்தார். இதன்போது பிரசித் கிருஷ்ணாவின் எகானமி ரேட்டும் 17.00 ஆக இருந்தது. இந்தப் போட்டியில் பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரசித் கிருஷ்ணாவிற்கு முன், இந்தச் சாதனை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தனது பெயரில் வைத்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு செஞ்சுரியன் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகச் சாஹல் 4 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுகொடுத்தார். மேலும் அந்தப் போட்டியில் அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் சாஹலின் எகானமி ரேட்டும் 16.00 இருந்தது.
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பெயர் உள்ளது. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இதே கவுகாத்தி ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 15.50 என்ற எகானமி ரேட்டில் 4 ஓவர்களில் மொத்தம் 62 ரன்கள் விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்.
இதன்மூலம், இந்த மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை விட்டுகொடுத்த பந்துவீச்சாளர்கள் என்ற மோசமான சாதனையைத் தங்கள் பெயரில் பதிவு செய்துள்ளனர்.

