Advertisements

சென்னை:பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் காலனி பகுதியில் உள்ள யுவராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7.35 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பூர்விகா மொபைல், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களைப் பல்வேறு கிளைகள்மூலம் விற்பனை செய்து வருகிறது.
Advertisements

