Pongal Gift Token: நாளை முதல் டோக்கன் விநியோகம்!

Advertisements

பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்குகிறது.தங்களுக்கு உரிய தேதியில் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்குச் சென்று பரிசுத்தொகுப்பு, ரொக்க பணத்தை பெற்றுக்கொள்ளலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கப்படுகிறது.

இதனிடையே மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்குகிறது.

டோக்கனில் நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். தங்களுக்கு உரிய தேதியில் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்குச் சென்று பரிசுத்தொகுப்பு, ரொக்க பணத்தை பெற்றுக்கொள்ளலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *