
இராணுவத்தினர் கொடி நாள் நிதிக்கு அனைவரும் பங்களிப்போம் எனக் கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய இராணுவத்தினர் கொடி நாள் தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில், நமது தேசத்தை அசைக்க முடியாத துணிச்சலுடன் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதைத்தொடர்ந்து, அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு மற்றும் மனப்பான்மை நமது மக்களைப் பாதுகாக்கிறது. மேலும், நமது தேசத்தை பலப்படுத்துகிறது. இதனால், இராணுவத்தினர் கொடி நாள் நிதிக்கு அனைவரும் பங்களிப்போம் என்று கூறி பதிவிட்டுள்ளார்.



