
பிலிப்பைன்ஸ் நாட்டில் இடிந்து விழுந்த மால்..!
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அதி சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் பெரிய மாலின் மேற்கூறை தகர்ந்து விழுந்ததில் தரை தளத்தில் இருந்த அனைத்து கடைகளும் சேதமடைந்தன.
இதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
வீதிகளில் தஞ்சமடைந்தனர்.மிகப் பெரிய மால்களில் இருந்த பெரிய தூண்கள் தரைமட்டமாக விழுந்தது. பிலிப்பைன்ஸில் பொதுவாக நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு போன்றவை அடிக்கடி நிகழும் நிகழ்வாக கருதப்படுகிறது.


