
சந்திரபாபு நாயுடுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு!
ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு நான்கு வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் வழக்கில் சிக்கி தற்போது சிறையில் உள்ள ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சட்டப் போராட்டத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வந்த நிலையில், அவருக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. நான்கு வார காலத்திற்கு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

