
சென்னை:
ராஜராஜ சோழன் பிறந்தநாளில் பா.ம.க., ஆட்சியை நிறுவுவோம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி கூறி உள்ளார்.
ராஜராஜ சோழன் தமிழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மாமன்னர். அவரது 1039ம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது என்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. கடல் கடந்து வெற்றிகளைக் குவித்ததன் மூலம், தமிழர்களின் வீரத்தை உலகுக்கு உணர்த்தியவர் ராஜராஜ சோழன்.
இந்த விழாவைக் கொண்டாடுவதன் மூலம், நம் வரலாற்று பெருமையை நினைவுகூர்வது மிக முக்கியம்.
ராஜராஜ சோழன் பாசனத் திட்டங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவரது சாதனைகள் நம்மை ஊக்குவிக்கின்றன. நாமும் கடுமையாக உழைத்து, நமது ஆட்சியை நிறுவி, மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம் எனப் பா.ம.க. கட்சியின் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

