K. S. Alagiri: அண்ணாமலை விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல!

பாஜக தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது தவிர  பேரிடர் காலங்களில் நிதியைப் பெற்றுத் தர வேண்டுமே இது போன்ற நேரங்களில்  ஆளுங்கட்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்காக, தமிழ்நாடு அரசுக்கு நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; 
வரலாறு காணாத வெள்ளத்தையும் மழையையும் சென்னையும் மற்றும் தென் தமிழகம் சந்தித்திருக்கிறது. இந்த நிமிடம் வரை ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரவில்லை. அந்த நிதிக்கு பெயரே இயற்கை பேரிடர் நிதிதான். பேரிடர் ஏற்பட்ட உடன் அவர்கள் அதை அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஒரு வரி எழுதி அனுப்புவதற்கு ஒன்றிய அரசு இவ்வளவு தயங்குகிறது மேலும் தமிழக மக்களை மாற்றான் தாய் மக்களாக பார்க்கிறது எனக் கூறினார்.
தமிழக பாஜக தலைமையில் இருக்கக்கூடியவர்கள் மோடிக்கு  அழுத்தம் கொடுத்து நிதியை பெற்று தர வேண்டும். இங்கு இருந்து கொண்டு ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதால் எந்த பலனும் கிடையாது.எந்த முயற்சியும் செய்யாமல்  நடந்து கொண்டிருக்கிற வேலைகளை குறை சொல்வது பேரிடர் காலத்தில் ஏற்புடையது அல்ல மக்கள் அதை விரும்ப மாட்டார்கள்.
மேலும் பிரதமர் பாராளுமன்றத்திற்கு வருவது கிடையாது, பத்திரிகையாளர்களை சந்திப்பது கிடையாது பிரச்சனைகளுக்கு பதில் கூறுவது கிடையாது ஆனாலும் அவர் பிரதமர். இந்திய பாராளுமன்ற வரலாற்றில் இவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதே கிடையாது.  ஹிட்லருடைய ஆட்சிக்குப் பின்னர் மோடியின் உடைய ஆட்சியில் தான் இது போன்ற நிகழ்வுகள் பாராளுமன்றத்தில் நடக்கிறது.
எதிர்க்கட்சி இல்லாத பாராளுமன்றம் பாராளுமன்றம் அல்ல இதற்கு பாராளுமன்றம் என்று இலக்கணமே தகாது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது ஜனநாயகத்தை ஏற்படுத்தலாம் என ரத்தம் சிந்தி இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *