நாட்டின் 80-வது சுதந்திர தினம் – முதல்முறையாக கொடியேற்றுகிறார் முதல்வர் ஜோசப் விஜய்!

Advertisements
நாட்டின் 80-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் சூழலில், இன்று காலை 3-வது அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது; இதில் சுதந்திர நாளில் அணியும் சீருடையுடன் மிடுக்குடன் பங்கேற்ற போலீசார் அணிவகுத்து வந்தனர். மேலும், இந்த ஆண்டு நடைபெறும் போலீஸ் அணிவகுப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படையினரும் இடம்பெற்றுள்ளனர். இத்தமிழக சுதந்திர தின விழாவில், தமிழ்நாட்டுக்கும் தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியோருக்கான ‘தகைசால் தமிழர்’ விருதும் , அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவோருக்கான டாக்டர் அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காகத் தொண்டாற்றியோருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள் மற்றும் முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான விருதுகளை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கிக் கவுரவிக்க உள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *