Hogenakkal: நீர்வரத்து அதிகரிப்பு!

Advertisements

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளிலிருந்து சுமார் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, ஒகேனக்கல், நாட்ராம்பாளையம், பிலிகுண்டுலு உள்ளிட்ட கடந்த 2 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 1,500 கன அடி தண்ணீர் மட்டுமே வந்த நிலையில் நேற்று காலை 6,500 கன அடியாக உயர்ந்தது. மேலும் 11 மணிக்கு 10,000 கன அடியாக உயர்ந்தது. நேற்று மாலைவரை அதே நீர்வரத்து தொடர்ந்த நிலையில் இன்று அதிகாலை வரை நீர்வரத்து குறைய தொடங்கியது.

இன்று காலை 7 மணிக்கு 8,000 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. மேலும் இன்று 10 மணியைப் பொறுத்தவரை மீண்டும் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் திறந்துவிடப்பட்ட நீரின் அளவு கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2,688 கன அடி நீர் மட்டுமே இன்று திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் நீர்வரத்து படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *