கனமழையால் பயிர்கள் சேதம் – இபிஎஸ் கோரிக்கை!

Advertisements

சென்னை: 

கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ்நாடு முழுவதும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கனமழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய அதிகாரிகள் உடனடியாகப் பார்வையிட்டுத் தகுந்த நிவாரணத்தை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *