Arvind Kejriwal: இடைக்கால ஜாமீனை 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு!

Advertisements

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது இடைக்கால ஜாமீனை 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.

பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிச் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம் என்றும், ஜூன் 2-ம் தேதி சரணடைய வேண்டும் எனவும் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் PET-CT ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதால் ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *