நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் , மீண்டும் பற்றி எரியும் அமெரிக்கா..!

Advertisements

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை பின்பற்றி வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டுமென அவர் உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் இந்தியர்கள் பலரும் விமானத்தில் நாடு கடத்தப்பட்டனர்.மேலும் இந்தியர்கள் கைவிலங்கட்டு நாடு கடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இருப்பினும் டொனால்ட் டிரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக எந்த ஒரு ஆவணமும் இன்றி குடியேறிய நபர்களை கணக்கெடுக்கும்படி நடைபெற்று வருகிறது.அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கடை ஒன்றில் அதிகாரிகள் நுழைந்து ஆய்வு செய்த பொழுது, அங்கு ஒரு சில ஊழியர்கள் முறையான ஆவணங்கள் இன்றி தங்கி இருந்து பணியாற்றியது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் அவர்களை உடனடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் காவல்துறைக்கும் அமெரிக்க அரசுக்கும் எதிராக முழக்கமிட்டவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.மேலும் போலீசாரை நோக்கி அவர்கள் முழக்கமிட்டதால் போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தவிர பெப்பர் பொடியையும் தூவியதால் போராட்டக்காரர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.

இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.இருப்பினும் போலீசார் ஒவ்வொரு குடியிருப்பாக சென்று சட்டவிரோதமாக குடியேறிய நபர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது.ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த போலீசார், போராட்டக்காரர்களை அடிக்கவும் தொடங்கினர். இதன் காரணமாக வலி தாங்க முடியாமல் ஏராளமானோர் கத்திக் கூச்சலிட்டனர். மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஃபெடரல் அலுவலகத்திலும் பொதுமக்கள் கூடி கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க வேண்டுமென முழக்கம் எழுப்பினர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய நபர்களை தினந்தோறும் கண்டறிந்து, குறைந்தது 3,000 பேரையாவது கைது செய்ய வேண்டுமென போலீசாருக்கு வெள்ளை மாளிகை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.சட்டவிரோதமாக குடியேறிய நபர்கள் மீது போலீசார் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே கலவர பூமியாக காட்சி அளிக்கிறது.இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *