பக்காவாக மூவ் செய்யும் பாஜக.. தவெக – பாஜக கூட்டணி கன்பாஃர்ம்?

Advertisements
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லிக்கு சென்றிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா. இந்த நிலையில் அடுத்தடுத்து சட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், பாஜகவின் தயவை நாடியே அவர் டெல்லி சென்றிருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடுந்துயர் சம்பவம் மக்கள் மனதில் இன்னும் ஆழமாகப் பதிந்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை விஜய் இன்னும் சந்திக்காதது கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும், த.வெ.க-வின் ஆனந்த் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “என் தாயின் இழப்புக்குப் பிறகு கரூரில் என் குடும்பத்தில் ஏற்பட்ட 41 உயிரிழப்புகள் மிகப்பெரிய வலியை கொடுத்துள்ளன. தற்போது எந்தவித உரையாடலுக்கும் தயார் நிலை இல்லை. விரைவில் கரூர் சென்று பொதுமக்களுடன் நேரடியாகச் சந்திப்போம். அவர்களுடன் மிகப்பெரிய பயணம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் வன்முறையை தூண்டும் விதமாகவும், இந்திய அரசியலுக்கும், பொது அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையாகவும் இருந்ததாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்காக, அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், த.வெ.க பரப்புரை கூட்டங்களில் பதிவான பேருந்து கேமரா காட்சிகளை ஒப்படைக்க கோரி ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. அதேபோல், த.வெ.க துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமாருக்கும் சம்மன் வழங்கப்பட்டது. இந்த சூழலில், ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இதுதொடர்பாக விசாரித்த போது சொந்த அலுவல் பணிகள் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *