US:சிஇஓ உடன் தகாத உறவு: இந்திய வம்சாவளிக்கு எதிராக நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!

Advertisements

தலைமை நிர்வாக அதிகாரியுடன் தகாத உறவில் ஈடுபட்டதற்காக இந்திய வம்சாவளி வழக்கறிஞர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

நார்ஃபோக் சதர்ன் கார்ப்பரேஷனின் தலைமை சட்ட அதிகாரியான நபனிதா நாக், தனது முதலாளியின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஷாவுடன் தகாத உறவில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இருவரும் தகாத உறவில் ஈடுபட்டதன் மூலம் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை மீறியதாக நார்ஃபோக் சதர்ன் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்கையானது “நிறுவனத்தின் தலைமைச் சட்ட அதிகாரியுடன் தகாத உறவில் ஈடுபட்டதன் மூலம் ஷா நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதாக, நடந்துகொண்டிருக்கும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஷாவின் விலகல் நிறுவனத்தின் செயல்திறன், நிதி அறிக்கை மற்றும் செயல்பாடுகளின் முடிவுகளுடன் தொடர்பில்லாதது” என்று நார்ஃபோக் சதர்ன் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *