அதிபர் டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம் – ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு..!

Advertisements

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இதையடுத்து இரு நாடுகளுக்குள்ளும் போர் பதற்றம் உருவான சூழலில், ஈரானில் உள்ள அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

ஈரானின் இந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா, யூஏஇ உள்ளிட்ட நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்த நிலையில், இந்த தாக்குதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கமளித்தார். மேலும் இஸ்ரேலும், ஈரானும் முழுமையான போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் ஈரான் அந்த தகவலை மறுத்தது.

மேலும் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.ஈரானின் ஊடகம் இந்த செய்தியை வெளியிடுவதற்கு சற்று முன்பு கூட ஈரானின் ஏவுகணை தெற்கு இஸ்ரேலை தாக்கியதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *