பெரும் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து சென்ற முதல்வர் ஸ்டாலின் !

Advertisements
தமிழ்நாட்டுக்கு பெருமுதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் மேற்கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு பெருமுதலீடுகளை ஈர்க்கும் விதமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு  ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஐந்தாவது முறையாக முதலமைச்சர் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, தமிழகத்தில் புதிதாக 32.81 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் பத்தரை லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் கூறினார். வரும் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறப் போகிறது என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகம் வளர்ந்துள்ளதா எனக் கேட்பவர்களுக்கு மத்திய அரசின் புள்ளி விபரங்களே அதற்குப் பதில் என்று பெருமையுடன் கூறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *