ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Advertisements

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா பாதுகாப்பு படைகளை நினைத்து பெருமைப்படுவதாக பதிவிட்டுள்ளார்.

இதேபோல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தள பதிவில், “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்பதாகவும், தேச நலன் கருதி நமது ராணுவத்திற்கு என்றும் துணை நிற்போம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டு என்று தெரிவித்துள்ளார்.
இதே போல் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் சந்திரபாபு நாயுடு, யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்நாவிஸ் உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர்களும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மல்லிகார்ஜுன கார்கே, ஓவைசி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த பதிலடி தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *