
ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2023 – 2025 (மேஷம் – கன்னி)
பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
என்னுரை
அன்புள்ள வாசக பெருமக்களே! எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனின் அருளோடும். எனது தந்தை ஜோதிட சக்கரவர்த்தி தெய்வத்திரு முருகு இராசேந்திரனின் ஆசியோடும் இந்த ராகு- கேது பெயர்ச்சிப் பலனை உங்களுக்காக வழங்கியுள்ளேன். சர்ப கிரகங்களான ராகு- கேது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சோபகிருது வருடம் ஜப்பசி மாதம் 13-ஆம் தேதி 30-10-2023 திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலா ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். 18-05-2025 இரவு 07.33 மணி வரை ராகு மேஷத்திலும், கேது துலாத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர். (வாக்கியப் பஞ்சாங்கபடி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21-ஆம் தேதி 08-10-2023 ஞாயிற்றுகிழமை மதியம் 03.35 மணி முதல் 26-04-2025 மாலை 04.08 மணி வரை). இதனால் 12 ராசி நேயர்களுக்கும் உண்டாக கூடிய பலா பலன்களை இப்புத்தகத்தில் தெள்ளத் தெளிவாக எழுதியுள்ளேன். இதனை படித்து அனைவரும் பலனடையும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
முனைவர் முருகு பாலமுருகன்
மேஷம் ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் )

தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்தில் இருந்தும் காப்பாற்றக்கூடிய பரந்த மனப்பான்மை கொண்ட மேஷ ராசி நேயர்களே, நிழல் கிரகம் என வர்ணிக்க படக்கூடிய ராகு கேது இது நாள் வரை ஜென்மத்தில் ராகு, 7-ல் கேது என சஞ்சரித்து பல்வேறு இன்னல்களை உங்களுக்கு ஏற்படுத்தினர். தற்போது ஏற்பட இருக்கக்கூடிய ராகு கேது மாற்றத்தால் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை (வாக்கியப்படி 08-10-2023 முதல் 26-04-2025 வரை) உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 12-ல் ராகு என இனி சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர்.
இதனால் உங்கள் வாழ்வில் நிலவிய நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்கள் குறைந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஒரு சில மனக்கசப்புகளால் சில நாட்களாக பிரிந்து இருந்தவர்கள் கூட தற்போது ஒன்று சேரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உற்றார் உறவினரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி சகஜ நிலை திரும்பும்.
கூட்டாளிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிப்பது மட்டுமில்லாமல் பொருளாதார அனுகூலங்களை அடைய முடியும். உங்களது தேக ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் செயல்படுத்த வேண்டும் என எண்ணிய காரியங்களை வருகின்ற நாட்களில் செயல்படுத்தி வெற்றி காண முடியும். கடந்த காலங்களில் ஏதோ ஒரு சக்தி உங்கள் முயற்சிகளுக்கு இடைஞ்சலாக இருந்தது போல் தோன்றியிருக்கும், தற்போது அந்த தடைகள் எல்லாம் விலகி எதிலும் புது உற்சாகத்துடன் செயல்படும் பலம் உண்டாகும்.
தடைப்பட்ட மங்களகரமான சுப காரியங்கள் தற்போது கைகூடும். திருமணமான புதுமண தம்பதிகள் ஒரு பிடிமானம் இல்லாமல் இருந்திருப்பீர்கள், தற்போது உங்களுக்கு ஒரு தெளிவான நிலை ஏற்பட்டு ஒற்றுமை அதிகரிப்பது மட்டுமில்லாமல் விரைவில் ஒரு குழந்தையை பெற்றெடுக்கக்கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல் உடன் இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் புதிய திட்டங்களை போட்டு வெற்றி அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகளை நீங்கள் பெற முடியும். உத்தியோக ரீதியாக பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு பலமும், கடந்த கால நெருக்கடிகள் விலகி ஒரு சுமூகமான சூழ்நிலையும் உண்டாகும்.
இந்த தருணத்தில் உங்கள் ராசிக்கு 11-ல் சனி சஞ்சாரம் செய்வது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதன் காரணமாக உங்களின் பொருளாதார நிலை வளரக்கூடிய அமைப்புகள், உங்களது கடன்கள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு வாழ்க்கை தரம் மேலோங்க கூடிய அமைப்பு, அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய யோகம் உண்டாகும்.
பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு 01-05-2024 வரை ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்தோடு செயல்பட்டால் மிகச் சிறப்பான பலன்களை அடைய முடியும்.
வரும் 01-05-2024 முதல் குரு தன ஸ்தானமான 2-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கக்கூடிய காலமானது உங்களுக்கு ஒரு பொற்காலம் என கூறலாம். பொருளாதார அனுகூலங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி, எதிர்பாராத தனச்சேர்க்கை, நினைத்தது நிறைவேறக்கூடிய அமைப்புகள், வீடு, மனை போன்றவற்றினை வாங்க கூடிய யோகங்கள், சகல விதத்திலும் அனுகூலங்கள் ஏற்படும். வாங்கிய கடன்களை பைசல் செய்து ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழும் யோகம் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் இருந்த சொல்ல முடியாத பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாகவும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும்.
மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுப்பாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் செயல்படுவதால் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சி அளிக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து குடும்பத் தேவைகள் யாவும் தடையின்றி பூர்த்தியாகும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். பூமி, மனை வாங்கும் யோகம் வரும் நாட்களில் உண்டு.
உத்தியோகம் பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களை அடைய முடியும். எடுக்கும் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வரும் நாட்களில் உயர்வான நிலையை எட்ட முடியும். சக நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்த கால நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்து மன நிம்மதி அடைவீர்கள். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். வெளியூர் தொடர்புகளால் மேன்மைகளை அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சாதகமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை கையாண்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பல பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
அரசியல்
பெயரும், புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்ததை விட அதிகமான அனுகூலங்கள் கிடைக்கும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் அனைவரையும் திருப்திபடுத்த முடியும். உங்களின் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். நீர் வரத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடு வரும் நாட்களில் குறையும். நவீன முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் உண்டு. உறவினர்களின் ஆதரவு மனநிம்மதியை தரும்.
கலைஞர்கள்
எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்களின் நடிப்புத் திறன் வெளிச்சத்திற்கு வரும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுகளால் மனநிறைவு உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. புதிய முதலீடுகளில் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் சற்று குறையும். இசைத்துறையில் உள்ளவர்களுக்கும் சாதிக்க கூடிய அளவிற்கு வாய்ப்புகள் தேடி வரும்.
பெண்கள்
உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமணம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி, உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
மாணவ மாணவியர்
உங்களுக்கு இருந்த மந்த நிலை முழுமையாக விலகி கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். போட்டி தேர்வுகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். மேற் கல்விக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9, நிறம் – ஆழ்சிவப்பு கிழமை – செவ்வாய்
கல் – பவளம் திசை – தெற்கு தெய்வம் – முருகன்
பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.
உங்களுக்கு குரு 01-05-2024 முடிய சாதகமின்றி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணிவதும், குரு எந்திரம் வைத்து வழிபடுவதும் நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது நல்லது.
ரிஷபம் ( கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் )

சாந்தமான குணம் இருந்தாலும் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாத இயல்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 6, 12-ல் சஞ்சரித்த ராகு-கேது தற்போது ஏற்பட உள்ள இடபெயர்ச்சியால் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை (வாக்கியப்படி 08-10-2023 முதல் 26-04-2025 வரை) ராகு ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் வீட்டிலும், கேது பஞ்சம ஸ்தானமான 5-ம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு சிறப்பாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.
குரு, சனி சாதகமற்று இருந்தாலும், ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருக்கடியான நேரத்தில் கூட எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு உங்கள் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பண பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
கேது உங்கள் ராசிக்கு 5-ல் இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் தான் ஏற்படக்கூடிய சிறு சிறு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பங்காளியிடம் பேசுகின்ற போது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது.
பூர்வீக சொத்து ரீதியாக உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும் என்றாலும் பிள்ளைகள் வழியில் தேவையற்ற நிம்மதி குறைவு ஏற்படலாம் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவது, தொழில், வியாபாரத்தில் எந்தவித நெருக்கடியும் எதிர்கொள்ளக்கூடிய திறன், போட்டிகள் இருந்தாலும் அதனை சமாளித்து அடைய வேண்டிய லாபத்தை அடையக்கூடிய பலம் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருந்தாலும் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிக்க முடியும்.
ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு வரும் 01-05-2024 முடிய விரைய ஸ்தானத்திலும், அதன் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் நினைக்கும் காரியங்களில் சற்று கவனத்தோடு ஈடுபடுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அசையும், அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு தேவையில்லாத பயணங்கள் உண்டாகும்.
01-05-2024 முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கின்ற பொழுது தனது சிறப்பு பார்வையாக 5, 7, 9-ம் வீடுகளை பார்க்கும் என்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளால் சில ஆதாயங்களை அடைய முடியும். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் வழியில் இருக்கக்கூடிய தேவையற்ற கவலைகள் எல்லாம் விலகி சுமூகமான நிலை உண்டாகும். வெளியூர் தொடர்புகளால் ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனி இக்காலங்களில் 10-ல் சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் யோசித்து செயல்படுவது, தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. தொழில் தொடர்பான கணக்கு, வழக்குகளை கூட சரிவர பராமரித்துக் கொள்வது மிகவும் சிறப்பு.
தற்போது உங்களுக்கு கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் தவறவிடாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை நீங்கள் அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் சொல்படி நடந்து கொண்டால் ஒரு உயர்வான நிலையினை எட்ட முடியும். பிறர் சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் இருந்தாலும் எதையும் சமாளித்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். சிறு பாதிப்பு என்றாலும் உடனே அதற்கு சிகிச்சை எடுப்பது நல்லது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கூட அவர்களது ஆரோக்கியத்தில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். மே 2024 முதல் உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி மனநிம்மதி உண்டாகும். சிலருக்கு வயிறு சம்பந்தபட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது.
குடும்பப் பொருளாதார நிலை
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறிது மன கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களை பக்குவமாக கையாளுவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் ரீதியாக உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகளுக்கு வாய்ப்பு இருப்பதால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவுகள் சற்று சாதகமாக இருக்கும். 2024 மே மாதத்திற்கு பிறகு உங்களுக்கு உள்ள அனைத்து பிரச்சினைகளும் விலகி சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள்.
உத்தியோகம்
பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் சற்று தாமதமாக கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பது மன நிம்மதியை தந்தாலும் சக நண்பர்களிடம் சற்று கவனத்துடன் பேசுவது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் 2024 மே மாதத்திற்கு பிறகு மிக பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் படிப்படியாக முன்னேற்றங்கள் இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உங்கள் செயல்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். கூட்டாளிகளை மட்டும் அனுசரித்து செல்வது நல்லது. தற்போது சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனி திறமையால் தொழிலில் சிறப்பான நிலையை அடைவீர்கள்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் ஆதாயம் கிடைக்கும். பெரிய தொகைகளை கையாள்வதை சிறிது காலத்திற்கு தள்ளி வைக்கவும். 2024 மே-க்கு பிறகு உங்கள் பிரச்சினைகள் குறைந்து நல்ல லாபத்தை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். கொடுத்த கடன்கள் சற்று தாமதமாக வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு, வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
அரசியல்
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவுடன் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் மாண்புமிகு உயர் பதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். கட்சிப் பணிகளுக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவு அதிகரிக்கும். பத்திரிக்கையாளர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். கூலியாட்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். பங்காளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும்.
கலைஞர்கள்
எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உங்கள் உழைப்பிற்கான பலன் தற்போது கிடைக்காகவிட்டாலும் விரைவில் நல்ல நிலையை அடைவீர்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு இடையூறு ஏற்படும். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். படப்பிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சாதகமாக இருக்கும். சிலருக்கு கர்பபை சம்மந்தபட்ட பாதிப்பு ஏற்படலாம் என்பதால் உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் சற்று அனுசரனையாக நடந்து கொள்ளவும். 2024 மே-க்கு பிறகு அனைத்து வகையிலும் மகிழ்ச்சி, குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். மேற்படிப்பிற்காக வெளியூர் செல்வீர்கள். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நடந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,8, நிறம் – வெண்மை, நீலம், கிழமை – வெள்ளி, சனி
கல் – வைரம் திசை – தென்கிழக்கு, தெய்வம் – விஷ்ணு, லக்ஷ்மி
பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5-ல் கேது சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
உங்களுக்கு குரு பகவான் சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணிவதும், குரு எந்திரம் வைத்து வழிபடுவதும் நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.
உங்களுக்கு சனி 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியை வழிபடுவதாலும், அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபமேற்றுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யவும்.
மிதுனம் ( மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் )

தீர்க்கமான சிந்தனை, சிறப்பான அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5, 11-ல் சஞ்சரித்த ராகு கேது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை (வாக்கியப்படி 08-10-2023 முதல் 26-04-2025 வரை) கேது பகவான் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் வீட்டிலும், ராகு பகவான் ஜீவன ஸ்தானமான 10-ம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ள இக்காலத்தில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் சகல சௌபாக்கியங்களையும் நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
அனைத்து விஷயத்திலும் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதல் வேலைபளு காரணமாக தேவையில்லாத அலைச்சல் அதன் காரணமாக உடல் அசதி ஏற்படலாம். வெளியூர் தொடர்புகள் மூலமாக பொருளாதார அணுகூலங்களும் எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது.
வீடுகளை பழுது பார்ப்பதற்காக சுபச் செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். ஒரு சிலர் பழைய வண்டியை விற்று விட்டு புதிதாக வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்திகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் அனைத்து விதமான நெருக்கடியும் சமாளித்து அடைய வேண்டிய லாபத்தை அடைய கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.
சர்ப்ப கிரகமான ராகு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். சக ஊழியர்கள் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை நீங்கள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலை நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு ஏற்படும்.
பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் வீட்டில் வரும் 01-05-2024 முடிய சஞ்சாரம் செய்ய இருப்பது ஒரு மிகச் சிறப்பான அமைப்பாகும். இதன் காரணமாக எதிர்பாராத அனுகூலங்களை பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை ஈட்ட முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களை அடைய முடியும்.
உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரிக்க கூடிய குரு வரும் 01-05-2024 முதல் விரைய ஸ்தானமான 12-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி 9-ல் இருப்பதால் எதையும் சமாளித்து அடைய வேண்டிய பொருளாதார அனுகூலங்களை அடைவீர்கள்.
உற்றார் உறவினர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் எந்தவித பிரச்சினையையும் சமாளிக்க கூடிய ஒரு பலம் உண்டாகும். குரு 12-ல் சஞ்சரிக்க கூடிய காலத்தில் தனது சிறப்பு பார்வையாக 4, 6, 8 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பார் என்பதால் எந்தவித எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய பலம், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதுவும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஆற்றல் ஏற்படும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மன நிம்மதி குறையும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன், இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கடினமாக உழைத்தால் தான் நற்பலனை அடைய முடியும்.
குடும்பம் பொருளாதாரநிலை
பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களை உற்றார் உறவினர்கள் தவறாக எடுத்து கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு சுப செலவுகளை சந்திப்பீர்கள்.
உத்தியோகம்
எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகமாக இருக்கும் என்பதால் மனநிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல் நிலை காரணமாக எதிலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேன்மைகள் அடைவீர்கள் என்றாலும் அதிக அலைச்சல் இருக்கும். தொழில் சிறப்பாக இருந்தாலும் மறைமுக பிரச்சினைகளால் அனைத்து விஷயத்திலும் அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். உடனிருப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பை பெற முடியாமல் போகும். தூர பயணங்களை தவிர்க்கவும்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை மிகவும் நன்றாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வாங்குவதற்கு இருந்த இடையூறுகள் விலகி தக்க நேரத்தில் பண வருவாய் கிடைக்கும். நம்பியவர்களே நெருக்கடி எற்படுத்தினாலும் உங்கள் தனி திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயம் உண்டு. பெரிய மனிதர்களின் நட்பு மன ஆறுதலை தரும்.
அரசியல்
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் கௌரவ பதவிகளை பெறுவீர்கள். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாது இருப்பது உத்தமம்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் பணியில் சுனக்கம் ஏற்படும். எதிலும் நீங்களே முன் நின்று செயல்பட வேண்டிய நிலை இருப்பதால் ஒய்வு இல்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். பங்காளிகளை பகைத்து கொள்ளாமல் இருப்பது, தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
கலைஞர்கள்
எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடன் இருப்பவர்கள் சில இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். வரவேண்டிய பணத்தொகைகள் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் சுகவாழ்விற்கு இடையூறு, இருப்பதை அனுபவிக்க தடை உண்டாகும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சினைகளை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருக்கவும். மண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு இருக்கும்.
மாணவ- மாணவியர்
மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புக்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,8, நிறம் – பச்சை, வெள்ளை, கிழமை – புதன், வெள்ளி
கல் – மரகதம் திசை – வடக்கு தெய்வம் – விஷ்ணு
பரிகாரம்
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.
கேது 4-ல் சஞ்சரிப்பதால் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது. சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது. சர்ப சாந்தி செய்வது நல்லது.
வரும் 01-05-2024 முதல் 12-ல் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, மஞ்சள் நிற பூக்களை சூடி கொள்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது.
கடகம் ( புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )

யாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பு கொண்ட கடக ராசி நேயர்களே, சந்திரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு 4, 10-ல் சஞ்சரிக்கும் ராகு கேது தற்போது ஏற்படும் இடபெயர்ச்சி மூலம் திருக்கணிதப்படி வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை (வாக்கியப்படி 08-10-2023 முதல் 26-04-2025 வரை). உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ம் வீட்டில் கேது, பாக்கிய ஸ்தனமான 9-ம் வீட்டில் ராகு சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பு ஆகும்.
எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம், உங்களுக்கு இருந்து வந்த அலைச்சல், டென்ஷன் பிரச்சினைகள் எல்லாம் குறைய கூடிய ஒரு அமைப்பு, நெருங்கியவர்களால் அனுகூலங்கள், வெளியூர் தொடர்புகள் மூலம் ஏற்ற மிகுந்த பலன்களை அடையக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடைய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்களுடைய அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். குறிப்பாக உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து ஒரு சில அனுகூலங்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு.
ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி தற்போது 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட்டால் இருக்க கூடிய பிரச்சினைகளை சமாளிக்கலாம். உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சிறு பாதிப்பு என்றாலும் உடனே மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது. வீண் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீடுகளை எடுத்து கொள்வதும் உத்தமம்.
ஆண்டு கோள் என வர்ணிக்க படக்கூடிய குரு 01-05-2024 முடிய 10-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பக்குவமாக நடந்து கொள்வது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இக்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் மிகவும் நிதானமாக நடப்பது, அதிக முதலீடு கொண்ட செயல்களில் முன் யோசனையுடன் செயல்படுவது நல்லது.
வரும் 01-05-2024 முதல் குரு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் ஒரு உன்னதமான அமைப்பாகும். குரு மாற்றத்துக்கு பிறகு குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு, குழந்தைகளால் அனுகூலங்கள், பிறருக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம், பூர்வீக சொத்துகளால் அனுகூலங்கள் ஏற்படும்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வேலை ஆட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லாவிட்டாலும் உங்கள் தனித் திறமையால் எதிலும் சிறப்பாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். ஒரு சிலருக்கு தொழில் முன்னேற்றத்திற்காக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கூட்டாளிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருப்பதால் அவர்கள் உதவியுடன் இருக்கக்கூடிய சிறு சிறு நெருக்கடிகளை எளிதில் சமாளிக்க முடியும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வருவது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். உடன் வேலை செய்பவர்கள் ஒரு சில இடையூறுகளை உங்களுக்கு தந்தாலும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு அனைத்தையும் சமாளித்து அனுகூல பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புக்காக ஒரு சிலர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் இருக்கிறது. கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் உறவினர்களிடம் பேசுகின்ற போது மட்டும் சற்று பக்குவமாகவும், பொறுமையுடனும் நடந்து கொள்வது மிக மிக நல்லது.
உடல் ஆரோக்கியம்
உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். மருத்துவச் செலவுகள் சற்று குறையும். வீண் செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பன் கிடைக்கும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மே 2024-க்கு பிறகு நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மன கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களிடம் கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
உத்தியோகம்
கடந்த கால தடைகள் விலகி பணியில் பதவி உயர்வுகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். இருக்கும் இடத்தில் கௌரவமும், பெயர் புகழும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். அலைச்சல்கள் குறைந்து எதிலும் நிம்மதியாக இருக்க முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்தாலும் அதன் மூலம் பொருளாதார அனுகூலங்கள் இருக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும் என்பதால் வேலைபளு சற்று அதிகரிக்கும். வரும் 01-05-2024-க்கு பிறகு உங்களுக்குள்ள கடன்கள் சற்று குறையும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனம் தேவை.
கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் 01-05-2024-க்கு பிறகு மிக சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடி வரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகளில் ஒரு சில தடைகள் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் விரைவில் நல்ல தீர்ப்பு கிட்டும். அசையும் அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.
அரசியல்
பெயர், புகழ் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் வர வேண்டிய பணவரவுகள் வந்து சேரும். வெளியூர் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கட்சி தொண்டர்கள் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை கவனமாக கையாள்வது நல்லது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைப்பதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். 2024 மே மாதத்திற்கு பிறகு நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். கூலியாட்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு கிடைக்க மாட்டார்கள் என்பதால் நீங்கள் எதிலும் நேரடியாக செயல்பட வேண்டி இருக்கும்.
கலைஞர்கள்
திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையில் இருந்த பணத் தொகைகள் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். படபிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். நேரத்திற்கு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியதுவம் தருவது நல்லது.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். இயற்கை உணவுகளை எடுத்து கொண்டால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலம் ஏற்படும்.
மாணவ மாணவியர்
கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புகளையும், பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளையும், பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9, நிறம் – வெள்ளை, சிவப்பு கிழமை – திங்கள், வியாழன்
கல் – முத்து திசை – வடகிழக்கு தெய்வம் – வெங்கடாசலபதி
பரிகாரம்
கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி 8-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியை வழிபடுவதாலும், அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யவும்.
குரு 10–ல் 01-05-2024 வரை சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, கொண்டை கடலை மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள், கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.
சிம்மம் ( மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம் )

மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும், எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரித்த சர்ப கிரகங்களான ராகு-கேது திருக்கணிதப்படி வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை (வாக்கியப்படி 08-10-2023 முதல் 26-04-2025 வரை) உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து செயல்படுவது மிக மிக நல்லது. பேச்சில் சற்று பொறுமையை கடைப்பிடிப்பதன் மூலமாக ஏற்படும் சிறு சிறு தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்க முடியும். பல்வேறு பொது காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு, ஆன்மீகப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும்.
ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி தற்போது 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதன் காரணமாக ஒற்றுமை குறைவுகள், மன அமைதி குறைவு உண்டாகும். குறிப்பாக மன¬வி வழி உறவினர்களிடம் வீண் பேச்சை குறைப்பது நல்லது. உற்றார் உறவினரிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது, வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பதும் உத்தமம். பொதுவாக ஒரு சிறு பாதிப்பாக இருக்கின்ற பொழுதே ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பெரிய பிரச்சினையிலிருந்து எளிதில் தப்பிக்க முடியும். மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியதுவம் தருவது நல்லது. வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது முன்னேச்சரிக்கையுடன் இருப்பது இரவு நேரங்களில் பயணங்களை தவிப்பது நல்லது.
உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியனுக்கு நட்பு கிரகமான குரு கோச்சார ரீதியாக வரும் 01-05-2024 முடிய உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது ஒரு அற்புதமான அமைப்பு என்ற காரணத்தினால் உங்களது பொருளாதார நிலையானது மிக மிக நன்றாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. கடுமையான நெருக்கடியில் கூட எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து அதன் மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
தொழில் வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல்பட்டால் அனுகூலமான பலன்களை நீங்கள் அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு பலமும் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்க கூடிய பலமும் உங்களுக்கு இருக்கும்.
01-05-2024 முதல் குருபகவான் 10-ல் சஞ்சாரம் செய்ய இருக்கின்ற காலத்தில் பணப்பரிமாற்ற விஷயங்களில் சில நெருக்கடிகள் இருந்தாலும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் குரு மாற்றத்திற்குப் பிறகு சற்று பொறுமையோடு நடப்பது ஒவ்வொரு வாய்ப்பிலும் கவனம் செலுத்தி செயல்படுவது, வேலையாட்கள் மற்றும் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அடைய வேண்டிய இலக்கை நீங்கள் அடைய முடியும். வேலைக்கு செல்பவர்கள் உங்கள் பணியில் நீங்கள் கவனத்தோடு இருந்தால் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்க முடியும். கால நேரம் பார்க்காமல் நீங்கள் உழைப்பதன் மூலம் அதற்கான நற்பெயரை நீங்கள் பெற முடியும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். மனைவி பிள்ளைகளுக்கு உண்டாக கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் வீண் செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவார்கள். நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பதும், இயற்கை உணவுகளை எடுத்து கொள்வதும் நல்லது. தூர பயணங்களை தவிர்க்கவும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப்பலன்களை அடைய முடியும்.
உத்தியோகம்
எடுக்கும் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தவற விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது.
தொழில் வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். பல பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. புதிய நபர்களிடம் பேசும் போது பேச்சில் சிந்தித்து பேசுவது உத்தமம். தொழிலில் படிப்படியான வளர்ச்சியை அடையும் யோகம் உங்களுக்கு இருந்தாலும் உடல் நலத்திற்கு சற்று நேரம் ஒதுக்குவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் வசூல் செய்து விட முடியும். வம்பு வழக்குகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். அசையா சொத்துக்களை பராமரிப்பதற்காக சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் மன நிம்மதி கிடைக்கும்.
அரசியல்
மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பொது இடங்களில் பேசும் போது பேச்சில் கவனமாக இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். சந்தையில் விளை பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கும். போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். தக்க நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பங்காளிகளை அனுசரித்து செல்வது மூலம் எதையும் எதிர்கொள்ள முடியும்.
கலைஞர்கள்
உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து திறமைகளை வெளிபடுத்த முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்களது சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக இருக்கும். அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். கடன்களை பைசல் செய்ய முடியும். போட்டிகள் அதிகம் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல்களும் உடல் சோர்வும் ஏற்படும்.
பெண்கள்
கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, கணவர் (மனைவி) வழி உறவினர்களிடம் பேச்சில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.
மாணவ மாணவியர்
கல்வியில் கவனமாக செயல்பட்டால்தான் முன்னேற்றத்தை அடைய முடியும். திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்றாலும் படிப்பிற்கு அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். தனி திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாய கூடிய சூழ்நிலை உண்டாகும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9, நிறம் – வெள்ளை, சிவப்பு கிழமை – ஞாயிறு, திங்கள்
கல் – மாணிக்கம் திசை – கிழக்கு தெய்வம் – சிவன்
பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8-ல் ராகு, 2-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
உங்களுக்கு குரு பகவான் வரும் 01-05-2024 முதல் 10-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவிப்பது, வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு யந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.
சனி 7-ல் சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஆஞ்சநேயரையும், வெங்கடாசலபதியையும் வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
கன்னி ( உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் )

கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2, 8-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்களான ராகு-கேது வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை (வாக்கியப்படி 08-10-2023 முதல் 26-04-2025 வரை) கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எந்த ஒரு செயலையும் யோசித்து செயல்பட வேண்டிய நேரம் ஆகும்.
சில நேரங்களில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் உங்களால் சிறப்பாக செயல்பட ஒரு சில தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். மதம் சார்ந்த பணிகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொதுவாக தேவையற்ற நெருக்கடிகளை குறைப்பது, தெய்வீக காரியங்களில் நீங்கள் ஈடுபடுவது மிக மிக நல்லது.
உங்கள் ராசிக்கு 7-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மிக மிக சிறப்பு. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளியிடம் பேசுகின்ற போது சற்று நிதானத்தோடு இருந்தால் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்கலாம். உங்களுக்கு இருந்து வந்த கடந்த கால உடல் உபாதைகள் சற்று விலகும் என்றாலும் நீங்கள் பொறுமையோடு செயல்பட்டால் ஒரு வளமான பலன்களை அடையலாம்.
இந்த தருணத்தில் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமும், ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமுமான சனி ருண, ரோக ஸ்தானமான 6-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு பணவரவுகள் மிக மிக சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களால் சில நெருக்கடி இருந்தாலும் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும்.
தொழில் வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபங்களை அடைய முடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் பரிபூரண வெற்றியினை தரும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் புதிய பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
வெளியூர் வெளிமாநிலங்கள் மூலமாக மிகப் பெரிய ஒரு ஆதாயத்தை அடைவீர்கள். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.
நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்து வந்த பூர்வீக சொத்து ரீதியான பிரச்சினைகள் எல்லாம் கூட தற்போது ஒரு முடிவுக்கு வந்து சாதகமான பலன்களை பெறுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவுகாலம் பிறக்கப் போகிறது என்று கூறினால் அது மிகையாகாது. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட சுலபமாக செய்து முடிக்கக் கூடிய பலம் உண்டாகும்.
ஆண்டு கோள் என வர்ணிக்க படக்கூடிய குரு வரும் 01-05-2024 முடிய 8-ல் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு செயல்படுவது மிக மிக நல்லது. எது எப்படி இருந்தாலும் சனி சாதகமாக இருப்பதால் அடைய வேண்டிய இலக்கை நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
தற்போது சற்று நிதானத்தோடு நீங்கள் செயல்பட்டால் வரும் 01-05-2024 முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்ற காலத்தில் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.
நீங்கள் நினைத்தது நிறைவேற கூடிய ஒரு சூழ்நிலை குரு மாற்றத்திற்குப் பிறகு உண்டு. பிள்ளைகள் வழியில் அதிர்ஷ்டங்கள், எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு ஒரு அழகிய குழந்தையை பெற்றெடுக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உறுதியாக உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உடல் நிலை சற்று சாதகமாக இருக்கும், சனி 6-ல் இருப்பதால் கடந்த கால உடல் சோர்வுகள் விலகி நீங்கள் சற்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் முன் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. மனைவி பிள்ளைகளுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. வீண் குழப்பங்களால் மன நிம்மதி குறையும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு. பண வரவுகள் சற்று சாதகமாக இருப்பதால் குடும்ப சூழ்நிலையை சமாளிக்க முடியும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்தியோகம்
பணியில் வேலைபளு அதிகமாக இருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக இருப்பதால் எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து விட முடியும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு மனைவி, பிள்ளைகளை விட்டு வெளியிடங்களில் தங்க நேரிடும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் இருந்து வாய்ப்புகள் வரும். 2024 மே மாதத்திற்கு பிறகு உங்களுக்கு ஒரு உயர்வான நிலை காத்திருக்கிறது.
தொழில் வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் நற்பலனை பெறுவீர்கள். சனி 6-ல் சஞ்சரிப்பதால் போட்டிகள் இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டு உங்கள் இலக்கை அடைய முடியும். தொழில் வளர்ச்சிக்காக அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை தற்போது செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். குரு வரும் 01-05-2024 முதல் 9-ல் சஞ்சரிக்கும் காலத்தில் நல்லதொரு வளர்ச்சியை தொழிலில் அடைய முடியும்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் கையாண்டு ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். வெளி நபர்கள் மூலம் உங்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் தற்போது வந்து மன மகிழ்ச்சி ஏற்படும். கடந்த கால வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். விரைவில் நல்ல மாற்றங்களை பெற முடியும்.
அரசியல்
உங்களது பெயர் புகழுக்கு எந்த விதத்திலும் குறை ஏற்படாது. கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகளை செய்தாலும் அதன் மூலம் ஆதாயம் அடைவீர்கள். முன்கோபத்தை குறைத்து கொள்வது, மேடை பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது, உடன் பழகுபவர்களிடமும் எச்சரிக்கையுடன் இருப்பது, பத்திரிக்கையாளர்களை பகைத்து கொள்ளாது இருப்பது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருக்கும். உங்கள் தேவைகள் தக்க நேரத்தில் பூர்த்தியாகும். உடன் இருப்பவர்கள் மூலம் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையுடன் இருக்கவும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் குறித்த நேரத்தில் கிடைக்கும். சந்தையில் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைத்து நல்ல லாபத்தை அடைவீர்கள். பொருளாதார நிலை எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். நெருங்கியவர்களையும் பங்காளிகளையும் அனுசரித்து சென்றால் எதையும் சமாளித்து விட முடியும்.
கலைஞர்கள்
தகுந்த கதாபாத்திரங்கள் கிடைத்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடைவீர்கள். போட்டி, பொறாமைகள் அதிகமாக இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் உங்களிடம் இருக்கும். பணவரவுகள் சற்று சாதகமாக அமையும். அதிக அலைச்சலால் சுகபோக வாழ்க்கையில் சிறிது பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.
பெண்கள்
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்லவும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருக்கவும். பண வரவு சிறப்பாக இருக்கும் என்பாதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும்.
மாணவ மாணவியர்
கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண் பெற்று நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல் நிலை மந்தமாக இருக்கும் என்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் கவனம் தேவை. பெரிய மனிதர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் – 5,6,7,8 நிறம் – பச்சை, நீலம் கிழமை – புதன், சனி
கல் – மரகத பச்சை திசை – வடக்கு தெய்வம் – ஸ்ரீவிஷ்ணு
பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
வரும் 01-05-2024 முடிய குரு 8-ல் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, கொண்டை கடலை மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள், கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.

