
கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அனைவருக்கும் எனது மனமார்ந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திவ்யமான போதனைகளில் சுயநலமற்ற செயல்களுக்கான ஆழமான ஊக்கமும் உத்வேகமும் அடங்கியுள்ளன; அவை தொடர்ந்து மனிதகுலத்தை வழிகாட்டி வருகின்றன. அவரது பக்திக்கும் வழிபாட்டிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் புனிதத் திருநாள், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நேர்மறை ஆற்றலையும் வலிமையையும் ஊட்ட வேண்டும் என்பதே எனது உளப்பூர்வமான விருப்பமாகும். ஜெய் ஸ்ரீகிருஷ்ணா!” என்று குறிப்பிட்டுள்ளார்.



