4 நாள்கள் அரசுமுறைப் பயணம் : ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் மோடி.!

Advertisements

உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி இன்று செல்கிறார்.

உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி இன்று செல்கிறார். தனது பயணத்தின் முதல்கட்டமாக உஸ்பெகிஸ்தானுக்கு செல்லும் அவா், அந்நாட்டின் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ்வுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தும் பிரதமா், இருதரப்பு வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளாா். இதன் பின்னர், கிா்கிஸ்தானின் பிஸ்கேக் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26-ஆவது உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்டோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, கிா்கிஸ்தானில் 6-ஆவது உலக நாடோடி இன பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவிலும் பிரதமா் பங்கேற்கவுள்ளாா்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *