
இந்தியா கேட்குளிர்காலம் ஆரம்பமானதிலிருந்து தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காற்று மாசு குறியீடு டெல்லியில் 445 ஆகவும் நொய்டாவில் 359 ஆகவும் குருகிராமில் 400 ஆகவும் அதிகரித்துள்ளது.
காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது. பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பல்வேறு நினைவுச் சின்னங்கள் புகைமூட்டத்திற்கு முன்பும் பின்பும் எப்படி உள்ளது என்பதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

