OPS On Illicit Liquor: ஸ்டாலின் பதவி விலக வேண்டும் – ஓபிஎஸ் போர்க்கோடி!

kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று, முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 30-க்கும் மேற்பட்ட பலியான விவகாரத்தில், தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக அரசுக்குக் கண்டனம் – ஓபிஎஸ்

இதுதொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கள்ளச்சாராயம் ஒழிப்பில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது. இதற்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நவீன சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம்” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *