One-sided love: மாணவியைக் கத்தியால் குத்தி விட்டுத் தப்பி ஓட்டம்!

Advertisements

One-sided love

காதலிக்க மறுத்த மாணவியை வாலிபர் ஒருவர் அந்த மாணவியைக் கை, கால், முகத்தில் கத்தியால் குத்தி விட்டுத் தப்பி ஓடிவிட்டார்…

சென்னை: சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்குச் செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது அங்கே வந்த ஒரு இளைஞர், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மாணவியை இழுத்துச் சென்றுள்ளார்.

அப்போது தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அப்போது அந்தப் பெண் காதலிக்க மறுத்தபோது, அந்த வாலிபர் பெண்ணின் கை, கால், முகத்தில் கத்தியால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். குரோம்பேட்டையில் முதலுதவி பெற்று, ஸ்டான்லி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *