களைந்து செல்லும் மாணவர்கள்.!சோனம் வாங்சுக் அளித்த நெகிழ்ச்சி பேட்டி.!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து கடந்த 28 நாட்களாக மாணவர்களும் பல்வேறு அமைப்பினரும் நடத்தி வந்த மாபெரும் தொடர் போராட்டம் தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசுடன் நடைபெற்ற நீண்ட கட்டப் பேச்சுவார்த்தையில் மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் கலைந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்தத் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் குறித்துப் பேசிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், “இது ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும். மத்திய அரசும், கல்வித்துறை அமைச்சரும் எங்களது கோரிக்கைகளை ஏற்று எடுத்துள்ள இந்த முடிவுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த 28 நாள் போராட்டமும் எந்தவித வன்முறையும் இன்றி முற்றிலும் அமைதியான முறையிலே வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், கரப்பான் ஜனதா கட்சி (CJP) அமைப்பின் செய்திப்பொடர்பாளர் சௌரவ் தாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுகையில், “மத்திய அரசுடன் நடத்தப்பட்ட சுமூகமான பேச்சுவார்த்தையில் மாணவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், கடந்த 28 நாட்களாகத் தொடர்ச்சியாக நடந்து வந்த ஜந்தர் மந்தர் போராட்டம் தற்போது நிறைவுக்கு வருகிறது. போராட்டத்தில் பங்கேற்றுத் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாகத் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

டெல்லியில் மாணவர்கள் நடத்திய இந்த அறவழிப் போராட்டம் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்திலும் இது மிகப்பெரிய விவாதங்களைக் கிளப்பியது. நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக மாணவர்களும் இளைஞர்களும் வீதிகளில் இறங்கிப் போராடிய வேளையில், உரிய அனுமதி இல்லை என்ற பெயரில் காவல்துறை அவர்களைக் கைது செய்ததும், ஆளுங்கட்சியான தவெகவின் மெத்தனப்போக்கும் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகின.

குறிப்பாக, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் தமிழக அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்துக் குரல் கொடுத்தனர். இந்நிலையில், டெல்லியில் மாணவர்கள் போராட்டம் வெற்றியுடன் முடிவுக்கு வந்துள்ளதும், மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளதும் நீட் விவகாரத்தில் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *