தமிழக மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நினைத்து பார்க்கமுடியாத ஆபத்து.!

Advertisements

நாகை மாவட்டம் நம்பியார் நகரைச் சேர்ந்த விக்னேஷ், விமல், சுகுமார் உட்பட 11 பேர் இரண்டு பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இரண்டு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது இரும்பு கம்பி, கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர்.

அத்துடன், வெள்ளி செயின், இரண்டு படகு என்ஜின்கள், ஜிபிஎஸ் கருவி, எக்கோ சவுண்டர், வாக்கி டாக்கி, செல்போன், மீன்பிடி வலை உள்ளிட்ட நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர். இதில்,

பலத்த காயமடைந்த 11 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *