பேனா சின்னத்திற்கு எதிரான மனுதள்ளுபடி!

Advertisements

Karunanidhi Pen Monument | Marina Statue

மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி…

டெல்லி: மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாநிலம் சார்ந்த இது போன்ற பிரச்சனைகளை உரிய அமைப்பு முன்பு அணுக வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Karunanidhi Pen Monument Marina Statue

பேனா நினைவு சின்ன விவகாரத்தைப் பொறுத்தவரை பசுமை தீர்ப்பாயம், உயர்நீதிமன்றம் தான் உரிய அமைப்பு என நீதிபதிகள் தெரிவித்தனர். பேனா நினைவுச் சின்னத்துக்கு எதிரான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது எனத் தமிழக அரசு தரப்பு குற்றம்சாட்டியது. மனுவை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்ததை அடுத்து மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *