இந்தியாவிலும் மாநில ஆட்சிகளை மாற்ற வலியுறுத்த வேண்டும் – தமிழ் தேசிய தலைவர் மணியரசன்

Advertisements
கூட்டாட்சி நாடுகளைப் போல் இந்தியாவிலும் மாநில ஆட்சிகளை மாற்ற வலியுறுத்தித் தஞ்சையில் கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளதாகத் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய மணியரசன், இந்திய அரசமைப்புச் சட்டம் 1950ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தபின் இன்று வரை செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், மாநில அரசுகளிடம் இருந்த அதிகாரங்களைப் பறிப்பதற்கானவை எனத் தெரிவித்தார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1937ஆம் ஆண்டு முதல் மாநில அரசிடம் இருந்து வந்த விற்பனைவரி உரிமையை நீக்கி, அதனை இந்திய அரசின் சரக்கு சேவை வரிக்குள் சேர்த்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
மாநில அரசிடம் இருந்த கல்வி உரிமையைப் பறித்துப் பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை இந்திய அரசிடம் சேர்த்துவிட்டதாகவும் மணியரசன் தெரிவித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *