
நேரடி நியமனம் மற்றும் தனியார் மயமாக்கலால் இடஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறது ஒன்றிய அரசு. மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருந்தால் அரசியலமைப்பையே இந்நேரம் மாற்றத் தொடங்கி இருப்பார்கள். பாஜகவினர் அரசியலமைப்பைப் பற்றிப் பேசத் தொடங்கியது தேர்தலுக்குப் பிறகுதான். ‘அரசியலமைப்பை மாற்றப் போகிறோம்’ என்ற பேச்சை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் எனப் பாஜகவினர் உணர்ந்துள்ளனர் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.


