முன்னாள் எம்.பி. காலமானார் !

Advertisements

கோவை:

கோவை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.பி. மோகன், இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81. இவர் 1980-ம் ஆண்டு எம்.பி.யாகப் பணியாற்றியவர். இதுமட்டுமல்லாமல் 1989-ம் ஆண்டு சிங்காநல்லூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்துள்ளார்.

தி.மு.க.வில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர், மாநில தீர்மானக்குழு இணை செயலாளர் போன்ற பதவிகளில் இருந்துள்ளார். மிசா கைதியாக ஒரு ஆண்டு ஜெயிலில் இருந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நெருங்கிப் பழகியவர். வயோதிகம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். முன்னாள் எம்.பி. மோகனுக்கு சுகுணா என்ற மனைவியும், டிவேதிரா என்ற மகளும், கவிதா என்ற மகனும் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *