Chennai Rain:தமிழகத்தில் 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு!

Advertisements

சென்னை:கிழக்கிந்திய வங்கக் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்தது. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டப் பகுதியில் மழை பெய்தது.

இந்தநிலையில் தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்திற்கு அதிக மழையை எதிர்பார்க்க முடியாது. லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகாலை யில் இருந்து லேசான மழை பெய்தது. மேக மூட்டத்துடன் மழை தூறல் இருந்தது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப் புரம், கள்ளக்குறிச்சி, கட லூர், கன்னியாகுமரி மாவட் டங்களில் மிதமான மழை பெய்தது.

இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது சென்னையில் மேக மூட்டத் துடன் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் 3 நாட்கள் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *