Chennai Metro: பயணிகளுக்குப் பரிசு அறிவித்த மெட்ரோ!

Advertisements

சென்னை : சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு, 2024 மார்ச் 15ம் தேதிவரை 3 மாதங்கள் பரிசுப் பொருட்களை வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

இது தொடர்பாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை மெட்ரோ இரயில் சேவைகளை வழங்கி வருகிறது.

சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் தொடங்கியதிலிருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ இரயில்களில் சிங்கார சென்னை அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 15.12.2023 முதல் 15.03.2024 வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாகப் பயணம் செய்யும் முதல் 40 பயணிகளைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பரிசுப் பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி உடன் இணைந்து பரிசுப் பொருள்களை வழங்கும்.பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும். பயணிகளை ஊக்குவிக்கவும் இவை வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் இதனைப் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *