
ஆட்டோ – லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் லக்சிசராய் மாவட்டம் ஜுல்னா கிராமம் வழியாக நள்ளிரவு ஒரே ஆட்டோவில் 14 பேர் பயணித்துள்ளனர். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக ஆட்டோமீது பயங்கர மோதியது. இந்தக் கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் லக்சிசராய் மாவட்டம் ஜுல்னா கிராமம் வழியாக நள்ளிரவு ஒரே ஆட்டோவில் 14 பேர் பயணித்துள்ளனர். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக ஆட்டோமீது பயங்கர மோதியது. இந்தக் கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
மேலும், உயிரிழந்த 9 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த 9 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டதாகப் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


