Bengaluru Bandh Tomorrow: பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!

Advertisements

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளைப் பந்த் நடைபெறுகிறது.

சென்னை: கன்னட அமைப்புகள் பந்த் எதிரொலியாகச் சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்றிரவு 8 மணி முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளைப் பந்த் நடைபெறுகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பரிந்துரையின் பேரில், தமிழகத்துக்கு கூடுதலாக 15 நாட்களுக்கு 5,000 கனஅடி நீரை தொடர்ந்து திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவின் அடுத்த கூட்டத்தில் செப்டம்பர் 26ம் தேதி தமிழகத்துடனான நதிநீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனக் கர்நாடக அமைச்சரவை தெரிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட ஆதரவு அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் இணைந்து நாளைப் பெங்களூருவில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. அதே நாளில் கர்நாடகா பந்த் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். நாளைக் காலை 11 மணிக்கு டவுன்ஹாலிலிருந்து மைசூரு வங்கி வட்டம்வரை கண்டன ஊர்வலம் நடைபெற உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியும் பந்த்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் கன்னட அமைப்புகள் நாளை முழு அடைப்பு நடத்துவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்றிரவு 8 மணி முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு மேல் சூழலுக்கு ஏற்பச் சென்னை, பெங்களுருவிலிருந்து பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *