ஷூட்டிங் ஸ்பாட்டில் தொல்லை, சரியா நடிக்க முடியவில்லை!

Advertisements

ஷூட்டிங் ஸ்பாட்டில் தொல்லை, சரியா நடிக்க முடியவில்லை!! வாத்தி பட நடிகை இப்படி சொல்லிட்டாரே..

மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சம்யுக்தா மேனன்.

மலைய படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சம்யுக்தா மேனன், “மலையாள படங்களில் நடிக்கும்போது பெரிய மேக்கப் இல்லாமல் தான் நடிப்பேன் ஆனால் தெலுங்கு சினிமாவில் அப்படி கிடையாது. மேக்கப் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டியது இருக்கும்”.

“எனக்கான காட்சியில் நடிக்கும்போது, படத்தின் டேக்காகத் தயாராக இருந்தேன். திடீர் என்று காஸ்ட்யூமர் சேலை சரியாக இல்லை என்று சொல்லிச் சரி செய்தார். நடிக்க வேண்டியதை மறந்து அவர் செய்துகொண்டு இருந்ததை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. நான் சொல்வது சிறுபிள்ளை தனமாக இருந்தாலும், எனக்கு இந்த விஷயம் எளிதானது இல்லை” என்று சம்யுக்தா மேனன் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *