மதுரை VCK கொடி பிரச்சனையில் 21 பேர் மீது வழக்கு

மதுரை:

மதுரை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதி வெளிச்சநத்தம் கிராமத்தில் கடந்த 7-ந்தேதி வி.சி.க. தலைவர் திருமாவளவன் கொடியேற்றுவதற்காக, ஏற்கனவே இருந்த 25 அடி உயர கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, அனுமதியின்றி கூடுதல் உயரமுள்ள 45 அடி உயர கொடிக்கம்பத்தை கட்சியினர் நிறுவியுள்ளனர்.

இதனை அகற்றுமாறு வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியபோது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வருவாய்த்துறை அலுவலர்கள் ராஜேஷ் மற்றும் பரமசிவம், பழனியாண்டி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பெண் வருவாய் ஆய்வாளர் அனிதா செல்போன் பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் வருவாய்த்துறை அலுவலர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக வி.சி.க.வினர் 21 பேர்மீது சத்திரப்பட்டி போலீசார் 8 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *