படிக்கட்டில் பயணம் செய்ததை தட்டிக் கேட்ட பேருந்து நடத்துநரை தாக்கிய இளைஞர் !

Advertisements

சென்னை: 

படிக்​கட்​டில் பயணம் செய்ததை தட்டிக் கேட்ட பேருந்து நடத்​துநர் மீது தாக்​குதல் நடத்திய இளைஞர் கைது செய்​யப்​பட்​டார். மணலியி​லிருந்து பாரி​முனை நோக்கி மாநகர அரசுப் பேருந்து ஒன்று கடந்த யிற்றுக்​கிழமை சென்று கொண்​டிருந்​தது.

அந்தப் பேருந்து, புளியந்​தோப்பு காவல் நிலைய பேருந்து நிலை​யத்​தில் நின்று, புறப்​பட்​ட​போது, ஓர் இளைஞர் படிக்​கட்​டிலேயே நின்று பயணித்​துள்ளார்.

இருக்கை​யில் அமரச் சொல்​லி​யும் கேட்​காத​தால், பேருந்து நடத்​துநர் பிரேம்​கு​மார் (39), அந்த இளைஞரைக் கண்டித்​துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், நடத்​துநரை தாக்கி, டிக்​கெட் அச்சிடும் இயந்​திரத்தை உடைத்து விட்டுத் தப்பியோடி​விட்​டார்.

பிரேம்​கு​மார் இதுகுறித்து புளியந்​தோப்பு காவல் நிலை​யத்​தில்

புகார் அளித்​தார். போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், நடத்​துநர் மீது தாக்​குதல் நடத்​தியது புளியந்​தோப்பு மோதிலால் நேரு தெரு​வைச் சேர்ந்த வீர மணி​கண்டன் (29) என்பது தெரிய​வந்​தது. அவரைப் போலீஸார் கைது செய்​து ​விசாரித்து வருகின்றனர்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *