
ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனின் உத்தரவுகள் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். இதில், ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட பைடனின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது என்றும் ஆட்டோபென் முறையில் கையெழுத்திடும் முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து, ஓவல் அலுவலகத்தில் பைடனைச் சுற்றி வந்தவர்கள் அவரிடமிருந்து அதிபர் பதவியைப் பறித்தனர் என்றும் கூறினார். இதை தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 45 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹெர்னாண்டசை மன்னிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


