
திருக்கோவிலூர் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியல் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது.
நேற்று முன்தினம் யாரோ ஒருவர் பால் விற்பனை தொடர்பாக இவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ஆனந்த் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி திருச்சி சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உடலை வைத்துச் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனந்த் தற்கொலைக்குக் காரணமான நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இந்தச் சாலை மறியலால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

