
கனமழை காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படாது என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் நாளைப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது எனவும் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.இதேபோலக் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளைச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது.


