S. M. Nasser: நிவாரண பொருட்களை வழங்கிய நாசர்!

Advertisements

நிவாரண பொருட்களை நீண்ட வரிசையில் நின்று பெற்று சென்ற பொது மக்கள்.

ஆவடி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் நிவாரண தொகுப்புகள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் 9வது வார்டில் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் நேரில் வழங்கினார்..
இதனை நீண்ட வரிசையில் நின்று நிவாரண பொருட்களை அப்பகுதி மக்கள் பெற்று சென்றனர்.. இதனை தொடர்ந்து திருமுல்லைவாயல் சோழன் நகர் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை நாசர் வழங்கினார்..
இதனை தொடர்ந்து பட்டாபிராம் அடுத்த கோபாலபுரம் மற்றும் கவரபாளையம் பகுதிகளில் பகுதி கழக செயலாளர் நாராயண பிரசாத் ஏற்பாட்டில் நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட  1500க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஆவடி நாசர் வழங்கினார்.
இதில் சுமார் 5000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. இதில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், பகுதி செயலாளர் பேபி சேகர், மண்டல குழு தலைவர்  அமுதா பேபி சேகர், மாநகர செயலாளர் சன் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *